sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா

/

கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா

கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா

கடலுார் கூட்டுறவு வங்கியில் வைப்பு தொகை சேகரிப்பு விழா


ADDED : செப் 17, 2024 05:55 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், சிறப்பு வைப்பு தொகை சேகரிப்பு விழா நடந்தது.

கடலுார் வங்கி தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, வங்கி மேலாண் இயக்குநர் கோமதி தலைமை தாங்கினார்.

பின், அவர் கூறுகையில், நேற்று 16ம் தேதி முதல் வரும் அக்., 31ம் தேதி வரை (365 நாட்களுக்கு) வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புகளுக்கு விழா கால சிறப்பு வட்டி விகிதமாக தனிநபர் வைப்புகளுக்கு 7.75 சதவீதமும், ரூபாய் ஒரு கோடிக்கு மேலான வைப்புகளுக்கு 8.15 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதமும் வழங்கப்படும்.

இதை பயன்படுத்தி 32 கிளை மேலாளர்களும் அதிக வைப்பு நிதிகளை திரட்டவும், பொதுமக்கள் தங்கள் நிதிகளை அருகில் உள்ள கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் முதலீடு செய்து பயன்பெறலாம் என்றார்.

மூத்த வாடிக்கையாளர் ஜெகதீசன் பேசுகையில், வணிக வங்கிகளை காட்டிலும் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் முதலீடுகளுக்கு வட்டி வகிதம் அதிகம் தருவதாக கூறினார்.

அப்போது, வங்கி உதவி பொது மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைமையக கிளை மேலாளர் சாந்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us