sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்

/

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலுார் மாவட்டம் 92.63 சதவீதம் தேர்ச்சி: மாநிலத்தில் 19ம் இடத்திற்கு முன்னேற்றம்


ADDED : மே 10, 2024 09:55 PM

Google News

ADDED : மே 10, 2024 09:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் மாவட்டம் 10ம் வகுப்பு தேர்வில் 92.63 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இது கடந்தாண்டை விட 4.14 சதவீதம் கூடுதலாகும்.

கடலுார் மாவட்டத்தில் உள்ள 246 அரசுப்பள்ளிகள், 46 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 148 தனியார் பள்ளிகள் என 440 பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 908 மாணவர்கள், 15 ஆயிரத்து 661 மாணவிகள் என மொத்தம் 32 ஆயிரத்து 569 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.

இவர்களில் 15 ஆயிரத்து 230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என, மொத்தம் 30 ஆயிரத்து 169 தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 90.08 சதவீதம், மாணவிகள் 95.39 சதவீதம்.

மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 92.63 ஆகும். கடந்தாண்டைவிட 4.14 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 33ம் இடத்தில் இருந்து 19ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

100 சதவீதம் தேர்ச்சி


மாவட்டத்தில் 170 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் 76, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 9, தனியார் பள்ளிகள் 85ம் அடங்கும்.






      Dinamalar
      Follow us