ADDED : மே 26, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த திராசுபாளையம் முருகன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலியன். இவரது மகள் ஜெகதீஸ்வரி, 17; இவர், கடந்த 22ம் தேதி பிற்பகல் 3:00 மணியளவில் வீட்டில் இருந்து அருகில் உள்ள காளி கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.