ADDED : செப் 08, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கவனையை சேர்ந்தவர்கள் ஜெயராம் மகன் பழனிமுத்து, 36; ஜெயராமன் மகன் வேல்முருகன். இருவருக்கும் வேலி அமைப்பதில் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று காலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வேல்முருகன், பழனிமுத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பழனிமுத்து விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
புகாரின் பேரில், மங்கலம் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, வேல்முருகனை தேடி வருகின்றனர்.