ADDED : செப் 12, 2024 06:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்ட இளநிலை உதவியாளர்கள், பணிச்சுமையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தனக்குமார் முன்னிலை வகித்தனர். இதில், கடலுார் மாவட்டத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு இ.எம்.ஐ.எஸ்., (எமிஸ்) பணியையும் செய்யும்படி சி.இ.ஓ., கூறியுள்ளதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து சி.இ.ஓ.,விடம் மனு கொடுத்தனர்.
நிர்வாகிகள் மணிகண்டன், முத்துகுமார், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.