sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரமற்ற நாப்கின்கள் அகற்றம்

/

துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரமற்ற நாப்கின்கள் அகற்றம்

துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரமற்ற நாப்கின்கள் அகற்றம்

துணை இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரமற்ற நாப்கின்கள் அகற்றம்


ADDED : ஜூன் 22, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தினமலர் செய்தி எதிரொலியாக, சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலத்தில் சுகாதாரமற்ற நிலையில் இருந்த சானிட்டரி நாப்கின்கள் அகற்றப்பட்டது.

பள்ளி மாணவியர் மற்றும் இளம்பெண்களின் சுகாதாரத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. பள்ளி மாணவிகள், பெண்களுக்கு புதுயுகம் என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் வழங்கப்படுகிறது. மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகம் மூலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.

அரசு திட்டம் மூலம் வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் பண்டல்கள், கடலுார் பீச் ரோட்டில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் அட்டை பெட்டிகளில் சுகாதாரமற்ற நிலையில் மலைப்போல் குவிந்து கிடந்தது.

இதனால், பல லட்சம் மதிப்பு நாப்கின்கள் பாழாகிறது என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, துணை இயக்குனர் அலுவலகத்தில் அட்டை பெட்டிகளில் குவிந்து கிடந்த நாப்கின்கள் அகற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us