/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
/
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 06, 2024 05:09 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு தினமலர் -பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும்,பொது அறிவு,பாடம் சார்ந்த அறிவு,நாட்டு நடப்புகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள்,விஞ்ஞான வளர்ச்சி,தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எளிதில் புரியும் வகையில் 'தினமலர்- பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
நெல்லிக்குப்பம் அரசு பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மறைந்த ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் அவரது மகன்கள் ஆசிரியர் ரவிசங்கர்,தொழிலதிபர் உதயசங்கர் ஆகியோர் நெல்லிக்குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு ' தினமலர்- பட்டம்' இதழை வழங்கினர்.
தலைமையாசிரியை பூங்கொடி,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராமலிங்கம் உடனிருந்தனர்.