/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயலட்சுமி கமிட்டி பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
/
ஜெயலட்சுமி கமிட்டி பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
ஜெயலட்சுமி கமிட்டி பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
ஜெயலட்சுமி கமிட்டி பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூன் 26, 2024 03:05 AM

கடலுார் : கடலுார், மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 'தினமலர்- பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல் தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் 'தினமலர்-பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலுார், மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி கமிட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் இதழ் வழங்கினார்.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சாந்தி, ஆசிரியர்கள் மேரி விமலி, சுஜாதா, மேரி மதலின் ரோஸி, ேஹமலதா, ராஜலட்சுமி, மங்கை, கனிமொழி, அமுதா உடனிருந்தனர்.