ADDED : மார் 15, 2025 12:49 AM

விருத்தாசலம்; மும்மொழி கொள்கையை எதிர்த்து, விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தண்டபாணி, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நாராயணசாமி, பாரதிராஜா, பொதுக்குழு உறுப்பினர் அரங்க பாலகிருஷ்ணான், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் ராமு முன்னிலை வகித்தனர். மும்மொழி கொள்கையை எதிர்த்து பொதுமக்களிடம் துண்டு பிரசும் கொடுத்தனர்.
நகர துணை செயலர்கள் நம்பிராஜன், சந்தானலட்சுமி சுந்தரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பாண்டியன், பழனிசாமி, வழக்கறிஞர் சரவணன், வழக்கறிஞரணி அருள்குமார், இளங்கோவன், நகர பொருளாளர் மணிகண்டன், தொண்டரணி சுரேஷ், முகமதுபாசில், விக்கி, இளைஞரணி பொன் கணேஷ், வசந்தகுமார், நடராஜன், தனசேகர், அருண் பிரபாகரன் கலந்து கொண்டனர்.