/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அள்ளூர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
/
அள்ளூர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
ADDED : ஜூலை 21, 2024 06:29 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு தமிழ் மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் ஜெயந்திஆனந்தன், நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ரீட்டா வரவேற்றார். விழாவில், பள்ளி மாணவர்களின் பேச்சு, கவிதை, ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மன்றம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன், ஜெயராணி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.