sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அரசு உதவித்தொகைக்கு லஞ்சம் முன்னாள் பெண் அலுவலருக்கு சிறை

/

அரசு உதவித்தொகைக்கு லஞ்சம் முன்னாள் பெண் அலுவலருக்கு சிறை

அரசு உதவித்தொகைக்கு லஞ்சம் முன்னாள் பெண் அலுவலருக்கு சிறை

அரசு உதவித்தொகைக்கு லஞ்சம் முன்னாள் பெண் அலுவலருக்கு சிறை


ADDED : செப் 11, 2024 01:59 AM

Google News

ADDED : செப் 11, 2024 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: திருமண உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய, முன்னாள் பெண் அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் கலியபெருமாள்,78; இவர் கடந்த 2011ம் ஆண்டு தனது மகளுக்கு திருமண உதவித்தொகை பெற, குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

உதவித்தொகை பெற்றுத் தர, ஊர்நல அலுவலராக பணிபுரிந்த மல்லிகா என்பவர், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து கலியபெருமாள் கடலுார் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் அறிவுரைப்படி நவ., 2ம் தேதி, குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மல்லிகாவிடம், கலியபெருமாள் ரசாயனம் தடவிய 1,000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த போலீசார், லஞ்சம் வாங்கிய மல்லிகாவை கைது செய்தனர்.

இவ்வழக்கில் கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி நாகராஜன் தீர்ப்பு கூறினார்.

இதில், ஓய்வுபெற்ற பெண் அலுவலர் மல்லிகா, 63, என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 6,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us