sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நந்திமங்கலத்தில் நிழற்குடை கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : மே 24, 2024 05:31 AM

Google News

ADDED : மே 24, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையைப் பயன்படுத்தி நந்திமங்கலம், வடகரை, அருகேரி கிராம மக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை போதிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால், கிராம மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மழை, வெயில் காலங்களில் திறந்தவெளியில் நின்று பஸ் ஏறும் அவலம் உள்ளதால் பெண்கள், முதியோர்கள், சிறுவர்கள் கடும் அவதியடைகின்றனர்.

எனவே, நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us