sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது

/

பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது

பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது

பள்ளி முதல்வரிடம் ரூ.7.30 லட்சம் மோசடி விருத்தாசலத்தில் போலி தம்பதி கைது


ADDED : ஜூன் 02, 2024 04:45 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தனியார் பள்ளி முதல்வரிடம், ரூ.7.30 லட்சம் ஏமாற்றிய போலி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் ரேவதி,50; விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறார்.

அதேபள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் விருத்தாசலம் பெரியார் நகரைச் சேர்ந்த சுமதி. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

அப்போது, தனியார் பள்ளி துவங்க இருப்பதாகவும், அதற்கு இடம் பார்த்து வருவதாக சுமதியிடம், ரேவதி கூறியுள்ளார்.

அதற்கு, சுமதி தனது கணவர் சிவக்குமார் மூலம் இடம் வாங்கி தருவதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு ரேவதியிடம் ரூ.7.30 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் இதுவரை இடம் வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார்.

இதுகுறித்து ரேவதி கடந்த 4ம் தேதி அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரித்தனர்.

அதில், சுமதியின் கணவர் சிவக்குமார் இல்லை என்பதும், பணத்திற்காக இருவரும் தம்பதியாக நாடகமாடியது தெரிய வந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us