ADDED : ஜூலை 20, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: வயிற்று வலி காரணமாக விவசாயி துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம், 45; விவசாயி. இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. இதற்கு சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் விரக்தியடைந்த திருவேங்கடம் நேற்று வீட்டிற்கு பின்புறம் உள்ள வேப்பம் மரத்தில் துாக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் திருவேங்கடத்தை மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து, திருவேங்கடத்தின், மனைவி சிவசங்கரி கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
