sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணிமுக்தாற்றில் தடுப்பணை கேட்டு விருதை விவசாயிகள் தர்ணா

/

மணிமுக்தாற்றில் தடுப்பணை கேட்டு விருதை விவசாயிகள் தர்ணா

மணிமுக்தாற்றில் தடுப்பணை கேட்டு விருதை விவசாயிகள் தர்ணா

மணிமுக்தாற்றில் தடுப்பணை கேட்டு விருதை விவசாயிகள் தர்ணா


ADDED : மே 15, 2024 11:22 PM

Google News

ADDED : மே 15, 2024 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டக் கோரி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தனவேல் தலைமையில் மணவாளநல்லுார், மணலுார் கிராம விவசாயிகள் இணைந்து, விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அலுவலகத்தை நேற்று காலை 10:00 மணியளவில் முற்றுகையிட்டனர்.

அப்போது, உதவி செயற்பொறியாளர் வர தாமதமானதால், அவரது அறை வாசலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், உதவி பொறியாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதில், மணவாளநல்லுார் வழியாக செல்லும் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டும் பணிக்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே, மணிமுக்தாற்றில் உடனடியாக தடுப்பணை கட்டும் பணியை துவங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு, மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்ட அளவீடு செய்து, கோப்புகள் தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பிறகு, பணிகள் துவங்கும்.

எனவே, ஆதாரம் இல்லாத தகவல்களை நம்ப வேண்டாம் என விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையேற்று, விவசாயிகள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us