ADDED : ஆக 29, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: வேன் மோதியதில் பைக்கில் சென்ற தந்தை, மகள் படுகாயமடைந்தனர்
வேப்பூர் தாலுகா, ஐவதுகுடி, கிழக்கு தெருவை சேர்ந்தவர், சுப்பிரமணியன் மகன் சிவப்பிரகாசம், 40. இவர் நேற்று முன்தினம் தனது மகள் பவாணி, 8: உடன் பைக்கில் சாமியார்பேட்டை கடற்கரை சென்றார். குள்ளஞ்சாவடி மெயின் ரோட்டில் பின்னால் வேகமாக வந்த மகேந்திரா வேன், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவப்பிரகாசம், பவாணி இருவரும் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.