ADDED : ஜூலை 23, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,70; கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் பாண்டுரங்கன் மகன் அருள்பாண்டியன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.