ADDED : மார் 11, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அருகே முன்விரோதம் காரணமாக அண்ணன், தங்கையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
புவனகிரி அடுத்த ஆதிவராகநல்லுார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். அதே பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், ஆத்திரமடைந்த கணேசன், அவரது மகன்கள் தினேஷ், சுபாஷ், உறவினர்கள் வெள்ளையன் என்கிற நடராஜ், சுபாஷ் ஆகியோர் சேர்ந்து முருகேசனை தாக்கினர். இதை தடுத்த முருகேசன் சகோதரி சரோஜாவையும் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் கணேசன் உட்பட 5 பேர் மீது புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.