/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரியில் சென்னை முன்னாள் மேயர் சர் பி.டி.தியாகராஜ செட்டியார் பிறந்த நாள் விழா
/
புவனகிரியில் சென்னை முன்னாள் மேயர் சர் பி.டி.தியாகராஜ செட்டியார் பிறந்த நாள் விழா
புவனகிரியில் சென்னை முன்னாள் மேயர் சர் பி.டி.தியாகராஜ செட்டியார் பிறந்த நாள் விழா
புவனகிரியில் சென்னை முன்னாள் மேயர் சர் பி.டி.தியாகராஜ செட்டியார் பிறந்த நாள் விழா
ADDED : மே 01, 2024 07:18 AM

புவனகிரி : முன்னாள் சென்னை மேயர் சர் பி.டி.தியாகராஜசெட்டியாரின் பிறந்த நாளை புவனகிரியில் அன்னதானத்துடன், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணத்தின் மேயராக விளங்கியவரும், தேவாங்க சமுதாய விடிவெள்ளியாகவும் போற்றப்பட்டவர் சர் பி.டி. தியாகராஜ செட்டியார். இவரின் 172 வது பிறந்தநாள் விழாவை புவனகிரியில் தேவாங்க சமுதாயத்தின் சார்பில் நேற்று கொண்டாடினர். நிகழ்ச்சியில் அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள திருமணமண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தேவாங்க சமுதாய நாட்டாமை ஆறுமுகம் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கிருஷ்ணசாமி வரவேற்றார். நிர்வாக குழுவினர் பேராசிரியர் கிருஷ்ணசாமி, ராமலிங்கம், பாலு, கிருஷ்ணன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராம்குமார், பழனிச்சாமி, அன்பு ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தனர். தொடர்ந்து அன்னதானத்துடன், மரக்கன்றுகள் வழங்கினர்.
நிர்வாக குழு செல்வம் நன்றி கூறினார்.