/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்னாள் அரசு வழக்கறிஞர் இல்ல திருமண விழா
/
முன்னாள் அரசு வழக்கறிஞர் இல்ல திருமண விழா
ADDED : செப் 17, 2024 06:30 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அ.திமு.க., மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர், முன்னாள் அரசு வழக்கறிஞர் விஜயக்குமார் - ஆசிரியை ஜீவா தம்பதியர் மகன் டாக்டர் அஜித்குமார் என்பவருக்கும், பண்ருட்டி பிரதிபா கேஷ்யூஸ் எம்.டி.ஆர்., எக்ஸ்போர்ட்ஸ், ரத்னா மெட்ரிக் பள்ளி தேவநாதன் - மஞ்சுளாதேவி மகள் டாக்டர் தேவதர்ஷினி திருமணம் மற்றும் வரவேற்பு விழா, விருத்தாசலம் விருதை வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது.
விருதை வித்யாலயா பள்ளி தாளாளர் அருள்குமார் வரவேற்றார். உயர் நீதிமன்ற பதிவாளர் செல்வநாதன், மாவட்ட நீதிபதிகள் விழுப்புரம் இளவரசன், தஞ்சாவூர் சுந்தர்ராஜன், திருச்சி சார்பு நீதிபதி மகாலட்சுமி, கலெக்டர் பெங்களூரு ராஜா, அ.தி.மு.க., மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தசாமி, ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,கள் பாண்டியன், சபா ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், மாநில பேரவை துணை செயலர் அருள்அழகன், மாவட்ட துணை செயலர் ரவிச்சந்திரன், மாவட்ட பாசறை செயலர் ரமேஷ், நகர செயலர் சந்திரகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவுஅருண், முன்னாள் பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன், வைஷ்ணவி திருமண மஹால் வசந்தி ஆனந்தகுமார், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர்கள் அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், நேஷனல் ரியல் எஸ்டேட் நாகூர்கனி, டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ், மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர்.
நகராட்சி கவுன்சிலர் சிங்காரவேல் நன்றி கூறினார்.