/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
/
விருத்தாசலத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
விருத்தாசலத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
விருத்தாசலத்தில் குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 01, 2024 06:30 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தொல்காப்பியா ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், பேராசிரியர் முனைவர் கவாஸ்கர், தலைமையாசிரியர் ரவீந்திரநாதன், மத்திய ஜி.எஸ்.டி.. கண்காணிப்பாளர் முருகவேல், தலைமையாசிரியர் டேவிட்லாசர், ஆசிரியர் கிடியேன் எபிநேசர் பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தனர்.
வழக்கறிஞர் சாஸ்தா பழனிவேல் வரவேற்றார்.
போட்டித்தேர்வு பயிற்றுனர்கள் கருணாமூர்த்தி, மாரிமுத்து, நாகராஜ், ஆனந்த், ராமாயணம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டித்தேர்வில் வெற்றி பெறுவது குறித்து, தேர்வர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
முடிவில், தி.மு.க., மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் தொல்காப்பியா அகாடமி நிறுவனர் செல்வமணி நன்றி கூறினார்.