/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 30 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை
/
கடலுாரில் 30 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை
கடலுாரில் 30 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை
கடலுாரில் 30 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆணை
ADDED : மார் 04, 2025 07:09 AM

கடலுார்; பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், 30 பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணையை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., ராஜசேகரன், டி.எஸ்.ஓ., ராஜீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி, பயிற்சி கலெக்டர் ஆகாஷ் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாவட்டம் முழுதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகள், பிரச்னைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினர். நேற்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 871 மனுக்கள் பெறப்பட்டன.
இதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில், வருவாய்த்துறை சார்பில் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்பில், 30 பழங்குடியின மக்களுக்கு இலவச மனை பட்டாவிற்கான ஆணை வழங்கப்பட்டது.