/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை
/
சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருட சேவை
ADDED : மே 20, 2024 05:39 AM

கடலுார், : கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இக்கோவிலில், கடந்த 14ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கருட சேவையை முன்னிட்டு, லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, இரவு 8:30 மணியளவில் கருட வாகனத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாளை 21ம் தேதி காலை வெண்ணைத்தாழி அலங்காரத்தில் வீதியுலா மற்றும் 22ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.

