ADDED : ஜூலை 27, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனுஷ்கா, அஸ்வந்த், இளமதி ஆகியோர் அதிக மதிப்பெண் எடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களை, ரோஸ்கண்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் நிர்வாகி ரவிசங்கர் பரிசு வழங்கி பாராட்டினார். தலைமையாசிரியர் தேவனாதன்,அரிமா தலைவர் ஜெயசந்திரன்,ரமேஷ்பாபு உடனிருந்தனர்.
