ADDED : மே 03, 2026 05:00 PM
அ நிறம் | அளவு
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில், ஆடு திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை, மாதாக்கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 41; இவரது, ஆடு நேற்று முன்தினம் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்தது. அப்போது, கடலுார் திருப்பாதிரிபுலியூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் என்பவர் ஆட்டை திருடி சென்றுவிட்டார்.
இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, பிரவின்குமாரை, 31; கைது செய்தனர்.
