sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு

/

குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு

குடிநீர் வழங்க கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு


ADDED : பிப் 27, 2025 09:13 AM

Google News

ADDED : பிப் 27, 2025 09:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; திட்டக்குடி அருகே குடிநீர் வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த சாத்தநத்தம், தெற்கு காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள போர்வெல் மோட்டார் கடந்த 3 நாட்களுக்கு முன் பழுதானது.

அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பழுதான மோட்டாரை சீரமைக்கக்கோரி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:30 மணியளவில் அவ்வழியே வந்த டவுன் பஸ்சை (தடம் எண் - 4) சிறைபிடித்து, நாவலுார் - ஆவினங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஆவினங்குடி போலீசார், ஊராட்சி செயலர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானம் செய்து, விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையேற்று காலை 9:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us