ADDED : ஆக 23, 2024 12:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர் : நல்லூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு, நல்லூர் பி.டி.ஓ., சண்முக சிகாமணி தலைமை தாங்கினார். துணை பி.டி.ஓ., பெரியநாயகசாமி முன்னிலை வகித்தார். அலுவலக உதவியாளர் தினேஷ்குமார் வரவேற்றார். மாற்றுத்திறனாளி சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க நீல அட்டை வழங்குவது, திட்டப் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்காதது குறித்து முகாம் நடந்தது.

