sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை 

/

மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை 

மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை 

மனைவி அடித்து கொலைகணவருக்கு ஆயுள் தண்டனை 


ADDED : மார் 14, 2025 05:27 AM

Google News

ADDED : மார் 14, 2025 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாமியாருக்கு சொந்தமான வீட்டை எழுதி தரும்படி கேட்டு மனைவியை அடித்துக் கொலை செய்த கணவருக்கு கடலுார் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த விழப்பள்ளத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47; கூலித் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தேசிங்கு மகள் தமிழ் என்கிற தமிழ்செல்வி, 35; என்பவரும் காதலித்து திருமணம் செய்தனர். 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

சண்முகம் தினமும் குடித்துவிட்டு மாமியார் ரத்தினாபதிக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுமாறு தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்., 18ம் தேதி காலை மதுபோதையில் வீட்டிற்கு வந்த சண்முகம், மனைவியிடம் மீண்டும் தகராறு செய்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்ச்செல்வியை, உருட்டு கட்டையால் சண்முகம், சரமாரியாக தாக்கினார். இதையடுத்து, 20ம் தேதி மீண்டும் தமிழ்ச்செல்வியை காலால் உதைத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்து, கடலுார் மகளிர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி லட்சுமி ரமேஷ், குற்றம்சாட்டப்பட்ட சண்முகத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us