/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் போதை நபர் வெயிலில் மயங்கி விழுந்து பலி
/
கடலுாரில் போதை நபர் வெயிலில் மயங்கி விழுந்து பலி
ADDED : மே 01, 2024 07:07 AM
கடலுார் : கடலுார் அடுத்த காரைக்காடு புதுநகரைச் சேர்ந்த ஜான்பீட்டர் மகன் ஜான் ஜோசப் ராஜன் 40; இவர் சிப்காட் ராயல் தனியார் கம்பெனியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்தார். கடந்த இரண்டு மாதமாக வேலைக்கு செல்லாமல், மது குடித்து விட்டு ஊர் சுற்றி வந்தார். நேற்று முன்தினம் ஜான் ஜோசப் ராஜன், கன்னிக்கோவிலுக்கு சென்று மது குடித்துவிட்டு மஞ்சக்குப்பத்திற்கு வந்தார். ஜான் ஜோசப் ராஜன் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே நடந்து சென்ற போது, கடும் வெயிலில் மயங்கி கீழே விழுந்தார். அந்த வழியாக சென்றவர்கள் குடித்துவிட்டு கிடக்கிறார் என கடந்து சென்றனர். தகவல் அறிந்த உறவினர்கள் ஜான் ஜோசப் ராஜனை, துாக்கிச் சென்று கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்த ஜான் ஜோசப் ராஜனுக்கு மனைவி மோகனா 38; ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.