sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

/

கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல்


ADDED : ஆக 07, 2024 06:24 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கம்பு, வேர்க்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய, விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

விருத்தாசலம் வட்டாரத்தில், 2024 - 25ம் ஆண்டு காரீப் பருவத்தில் கம்பு மானாவாரி பயிராகவும் மற்றும் வேர்க்கடலை மானாவரி, இறவை பயிராக விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது, கம்பு சாகுபடி செய்யப்பட்டு, 30 - 40 நாட்கள் வயது பயிராகவும், வேர்க்கடலை 40 - 60 நாட்கள் வயது பயிராகவும் உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

பயிர் காப்பீடு செய்வதற்கு விண்ணப்ப படிவம், உறுதிமொழி படிவம், ஆதார் எண் இணைக்கப்பட்ட இ.கே.ஒய்.சி., பூர்த்தி செய்யப்பட்ட வங்கி கணக்கு புக், சிட்டா, அடங்கல், ஆதார் நகல்களை இணைக்க வேண்டும்.மேலும், கம்பு பயிருக்கு ஏக்கருக்கு ரூ.186, வேர்க்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.590 பிரீமிய தொகை செலுத்த வேண்டும்.தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மைகூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்களில் வரும் 16ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்.






      Dinamalar
      Follow us