/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் கஞ்சா பதுக்்கிய வாலிபர்கைது
/
வீட்டில் கஞ்சா பதுக்்கிய வாலிபர்கைது
ADDED : மே 10, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் வாலிபர் ஒருவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று வடக்கு சென்னிநத்தம் கிராமத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அதில், அதே கிராமத்தை சேர்ந்த சிகாமணி மகன் முத்து,24; வீட்டில் விற்பனைக்காக ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து முத்துவை கைது செய்தனர்.