/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு
/
சிதம்பரத்தில் ரூ.2 லட்சம் நகை திருட்டு
ADDED : ஆக 09, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம், குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம்,53; கவரிங் நகை கடை தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மகள் பிரச வத்திற்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 சவரன் நகை, கொலுசு, 8,000 ரூபாய் பணம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
புகாரின் பேரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.