ADDED : செப் 07, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அடுத்த கிருஷ்ணாபுரம் வள்ளலார் ஜோதி நிலையத்தின் நிறுவப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம் மற்றும் முதல் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை திருவருட்பாவை புதுவை அன்னபூரணி மற்றும் சதாசிவம் முற்றோதல் நிகழ்த்தினர்.
நேற்று காலை 6:30 மணியளவில் அகவல் பாராயணம், காலை 8:00 மணிக்கு சன்மார்க்கக் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 9:15 மணி முதல் 10:15 மணிக்குள் சக்தி வளாகம் மேட்டுக்குப்பம் கோவை சிவப்பிரகாஷ் சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடந்து.
விழாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் வள்ளலார் பக்தர்கள் செய்திருந்தனர்.