/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா
/
கடலுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா
ADDED : ஏப் 13, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார், திருப்பாதிரிபுலியூர் வீரஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் 'குரோதி ஆண்டு சித்திரை' மாதம் வருட பிறப்பையொட்டி நாளை 14ம் தேதி லட்சத் தீபம் விழா நடக்கிறது.
அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு மற்றும் உற்சவ சுவாமிக்கு சிறப்பு திருமஞ்மனமும், மகா தீபாராதனையும் நடக்கிறது. பின், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்று லட்சத்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு வீர ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடக்கிறது.

