நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, வெண்கரும்பூர், புதிய காலனியில் வீட்டில் பிளாஸ்டிக் வாளியில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 34, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.