ADDED : ஆக 13, 2024 09:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) சுதந்திர தினத்தையொட்டி அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
சுதந்திர தினத்தையொட்டி, நாளை (15ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் பாருடன் கூடிய மதுபானக் கூடங்கள் அனைத்து மூடப்பட வேண்டும்.
திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மதுபான கூட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

