ADDED : மே 19, 2024 04:33 AM
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே இடம் தொடர்பான தகராறில் 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பண்ருட்டி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால், 34; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
நேற்று இது தொடர்பாக மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பாலகிருஷ்ணன், ராஜேந்திரன் அவரது உறவினர் ஜெயஸ்ரீ ஆகியோரை ஜெயபால் தரப்பினர் திட்டி, தாக்கினர்.
இதில் பாலகிருஷ்ணன் உட்பட 3 பேரும் படுகாயமடைந்து, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், ஜெயபால், ராஜவள்ளி, ஆனந்தி, ஜெயசுந்தரி ஆகிய 4 பேர் மீதும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

