/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் 'லோக் அதாலத்':ரூ.10.71 கோடிக்கு தீர்வு
/
விருதையில் 'லோக் அதாலத்':ரூ.10.71 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 17, 2024 06:00 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 10 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 370 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது.
முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுரேஷ் முன்னிலை வகித்தார். மாஜிஸ்திரேட் அன்னலட்சுமி, பயிற்சி நீதிபதி கீதா கூற்றுவேல், மூத்த வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வழக்குகளை விசாரித்தனர்.
அதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி, வங்கி வாராக்கடன், குடும்ப நலன், போலீஸ் அபராத வழக்குகள் உட்பட 147 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 10 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 370 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.
முதுநிலை நிர்வாக உதவியாளர் அஸ்வத்தராமன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

