/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லோக்சபா தேர்தல் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்
/
லோக்சபா தேர்தல் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்
ADDED : ஏப் 13, 2024 05:10 AM
கடலுார்: லோக்சபா தேர்தலையொட்டி, டாஸ்மாக், அனைத்து மதுபானக் கடைகள் நான்கு நாட்களுக்கு மூடப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு:
லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் சுதந்திரமாகவும், அமைதியாகவும் சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மதுபானங்கள் சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 17ம் தேதி காலை 10:00 மணி முதல் ஓட்டுப்பதிவு நாள் 19ம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரையிலும் மற்றும் ஓட்டு எண்ணும் நாளான ஜூன் 4ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் மூடப்படுகிறது.
மதுபானங்கள் விற்பனை செய்ய அரசு உரிமம் பெற்ற கேளிக்கை விடுதிகள், ஓட்டலுடன் இணைந்த பார்கள் போன்ற எப்.எல்-1 முதல் 11 வரை உள்ள அனைத்து மதுபான விற்பனை கடைகளும் மூடப்பட வேண்டும்.
இதனை மீறி மதுபானம் விற்கும் கடைகள், கேளிக்கை பார் உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

