/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
/
மா.கம்யூ., காத்திருப்பு போராட்டம்
ADDED : மார் 07, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் மா. கம்யூ., கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது.
காடாம்புலியூர் ராஜகணபதி நகர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி நேற்று தாலுகா அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு சரவணன், மோகன்ராஜ், தலைமை தாங்கினர்.
மாவட்ட செயற்குழு ராமசந்திரன், கிருஷ்ணன், வினோத்குமார் பேசினர்.
லோகநாதன், ஜெகதீசன், பன்னீர், குமரகுருபரன், முருகன், பூர்வசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.