/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
/
மகாலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 27, 2024 04:27 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பொன்னங்கோவில் மகாலிங்கேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 24ம் தேதி காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், 25ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 6:00 மணிக்கு யாத்ராதானம், கலசம் புறப்பாடகி 7:00 மணிக்கு கோவிலில் உள்ள அய்யனார், ஸ்ரீசெல்லியம்மனுக்கும், 8:15 மணிக்கு வெள்ளை விநாயகர், மகாலிங்கேஸ்வரர், மங்களாம்பிகை அம்மன் ஆகிய விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

