/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயிலில் சிக்கி கள்ளக்குறிச்சி நபர் பலி
/
ரயிலில் சிக்கி கள்ளக்குறிச்சி நபர் பலி
ADDED : மார் 13, 2025 12:36 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே ரயில் பாதையில், கள்ளக்குறிச்சி நபர் தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி ரயில்வே சுரங்கப்பாதை அருகே, ரயில் பாதையோரம் நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், தலை சிதைந்த நிலையில் கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு மாரிமுத்து மகன் பாலசுப்ரமணியன், 41, என்பதும், ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பணிபுரிந்ததும் தெரிந்தது. இவரது மனைவி ஜெயா அங்குள்ள ஆதிதிராவிட நலப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக பாலசுப்ரமணியன் வீட்டை விட்டு வெளியேறியதும், நேற்று காலை ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்ததும் தெரிந்தது.
இதனால், அவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.