ADDED : பிப் 23, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பல்கலைகழக சீனிவாச சாஸ்திரி அரங்க வாயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அருட்செல்வி உறுதிமொழி வாசித்தார்.
பதிவாளர் (பொறுப்பு) பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குமார், புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று உறுதிமொழியேற்றனர்.