/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் தேவை
/
நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் தேவை
ADDED : மே 06, 2024 06:11 AM
மந்தாரக்குப்பம் : நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் கடலுார்-திருச்சி, கடலுார்-சேலம், காரைக்கால்-பெங்களூரு ஆகிய ரயில்கள் நெய்வேலி வழியாக தினசரி சென்று வருகின்றன. இங்கு 500 க்கும் மேற்பட்ட பயணிகள் தினசரி ரயிலில் பயணம் செய்கின்றனர். நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் இல்லாததால் அப்பகுதி மக்கள் நெய்வேலி கடைவீதியில் உள்ள ேஹாட்டல்களில் அதிக விலை கொடுத்து உணவுகள் வாங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே நெய்வேலி ரயில்வே ஸ்டேஷனில் மலிவு விலை உணவகம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.