sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல், மணிலா காப்பீடு செய்ய வலியுறுத்தல்: கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதி

/

நெல், மணிலா காப்பீடு செய்ய வலியுறுத்தல்: கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதி

நெல், மணிலா காப்பீடு செய்ய வலியுறுத்தல்: கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதி

நெல், மணிலா காப்பீடு செய்ய வலியுறுத்தல்: கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதி


ADDED : ஜூலை 08, 2024 04:34 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 04:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் காரீப் பருவத்தில் செய்யும் பயிர்களை பதிவு செய்ய இம்மாதம் இறுதி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

நடப்பு ஆண்டில் காரீப், சிறப்பு மற்றும் ரபி பருவமாக தமிழ்நாட்டில் நெற்பயிர் மற்றும் இதர பயிர்களான மக்காச் சோளம், பருத்தி, உளுந்து ஆகியவற்றை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.

நடப்பு ஆண்டில் ெஹச்டிஎப்சி, இஆர்ஜிஓ பொது காப்பீட்டு நிறுவனம் இத்திட்டத்தினை கடலுார் மாவட்டத்தில் செயல்படுத்துகிறது. இதன்படி இவ்வாண்டில், காரீப் பருவத்தில் நெல் 1, கம்பு, மணிலா, எள், சிறப்பு பட்டத்தில் சம்பா நெல் 2 , மக்காசோளம் 1 , பருத்தி 2மற்றும் ரபி பருவத்தில் மணிலா, நவரை நெல் 3 , நெல் தரிசில் உளுந்து, பச்சைப்பயறு, பருத்தி மற்றும் கரும்பு பயிர்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், பொது சேவை மையங்கள் மூலமாகவோ வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். காரீப் பருவத்தில் நெல் 1 மற்றும் கம்பு, மணிலா, எள் பயிர்களுக்கு முறையே சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் இம்மாதம் 31ம் தேதியாகும்.

அடுத்த மாதம் 16ம் தேதிக்குள் விவசாயிகள் இத்திட்டத்தில் பிரிமியம் செலுத்தக் கடைசி நாளாக அறிவுக்கப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் நெல், கம்பு, மணிலா மற்றும் எள் பயிர்களுக்கு 730 ரூபாயும், மணிலா 590 ரூபாயும், கம்புக்கு 156 ரூபாயும், எள் பயிருக்கு 188 ரூபாயும் காப்பீடு கட்டணமாக செலுத்தினால் போதுமானது. மேலும், இத்திட்டம் தொடர்பாக விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகத்தினை உரிய பயிர் காப்பீட்டு நிறுவன முகவர் அல்லது தங்களது வட்டார வேளாண்மைவிரிவாக்க மையத்தில் உள்ள அலுவலர்களை அணுகி தெரிந்துக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us