sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி

/

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி

முன்னாள் முதல்வர் கருணாநிதி கொடியேற்றிய கம்பத்தை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்த முடிவு நெல்லிக்குப்பம் தி.மு.க., தொண்டர்கள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 01, 2024 06:22 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொடியேற்றிய கம்பத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் கணேசன் கொடியேற்றுகிறார்.

நெல்லிக்குப்பத்தில் 1998 ஆம் ஆண்டு நடந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போதைய தோல் பொருட்கள் தொழிலாளர் நலவாரிய தலைவருமான புகழேந்தி திருமணத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். அப்போது மாருதி நகர் அருகே முக்கிய சாலையோரம் கல்வெட்டு அமைத்து கம்பத்தில் கருணாநிதி கொடியேற்றினார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கொடிகம்பத்தை பராமரிக்காமல் இருந்தனர்.இந்நிலையில் சேர்மன் ஜெயந்தி,பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவுறையின் பேரில் இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா அந்த கொடிகம்பத்தை புதுப்பித்துள்ளார்.

கருணாநிதி பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவு நாள் விழாவை முன்னிட்டு கருணாநிதியால் கொடியேற்றப்பட்ட அதே கம்பத்தில் கொடியேற்ற முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் கணேசன் கட்சி கொடியேற்றுகிறார்.இதற்கான ஏற்பாடுகளை சேர்மன் ஜெயந்தி,தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட பிரதிநிதிகள் வேலு,வீரமணி, கதிரேசன், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா செய்து வருகின்றனர். கருணாநிதியால் கொடியேற்றப்பட்ட கம்பத்தை புதுப்பித்து மீண்டும் கொடியேற்றுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us