ADDED : ஆக 05, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கிய வாலிபரை முதுநகர் போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், முதுநகர், செல்லங்குப்பம் சுனாமி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் ராஜா, 27. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதிஷ், 32. இருவர் வீட்டிற்கு இடையே உள்ள காலியாக உள்ள பொது இடத்தில் குப்பை கொட்டுவதில் முன்விரோதம் உள்ளது.
பொது இடத்தில் குப்பை கொட்டியதை ராஜா மனைவி பவித்ரா, சதிஷ் மனைவி கலைவாணியிடம் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை சமாதானம் செய்ய வந்த ராஜாவை, சதிஷ் ஆபாசமாக திட்டி, உருட்டுக் கட்டையால் தாக்கினார். படுகாயம் அடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராஜா கொடுத்த புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சதிஷை தேடி வருகின்றனர்.