sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை

நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை

நெய்வேலி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை


ADDED : ஆக 05, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2024 12:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: நெய்வேலி ரயில் நிலையத்தில் குடிநீர், மின் விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெய்வேலி ரயில் நிலையம் வழியாக தினசரி கடலுார் - திருச்சி, கடலுார் - சேலம், காரைக்கால் - பெங்களூரு ஆகிய ரயில்கள் தினசரி இவ்வழியாக இருமுறை சென்று வருகின்றன.

ஏராளமான பயணிகள் நெய்வேலி ரயில் நிலையத்திற்கு தினசரி வந்து செல்கின்றனர்.

ரயில் நிலையத்தில் குடிநீர், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் திருச்சி - கடலுார் ரயில் தினசரி இரவு 7:30 மணி மற்றும் சேலம் - கடலுார் ரயில் தினசரி இரவு 9:30 மணிக்குநெய்வேலி ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் கடலுாருக்கு புறப்பட்டு செல்கிறது.

இரவு நேரத்தில் முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணிகள் நெய்வேலி ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போது வழிப்பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே மின்விளக்கு, கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அமைக்கரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us