ADDED : மே 28, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு நிகும்பலா யாகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு, வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். வராஹி அம்மனை தேய்பிறை பஞ்சமி நாளில் வணங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, தேய்பிறை பஞ்சமியான நேற்று வராஹி அம்மனுக்கு சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது. அப்போது, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து அருள்பாலித்தார்.