ADDED : செப் 01, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையம் பெட்டிக்கடையில் குட்கா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
புவனகிரி மற்றும் கீரப்பாளையம் பகுதியில் எஸ்.பி., சிறப்பு டீம் போலீசார் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கீரப்பாளையம் பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஜோதிராமன்,60; என்பவரை பிடித்து புவனகிரி போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.